உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு

பிளஸ் 2 செய்முறை தேர்வு 23,013 மாணவர்கள் பங்கேற்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 செய்முறை தேர்வில் 23,013 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டத்தில் 205 பள்ளிகளில் பிளஸ் 2வில் 30,159 மாணவர்களும், பிளஸ் 1ல் 30,499 மாணவர்களும், பத்தாம் வகுப்பில் 32,954 மாணவர்களும் படித்து வருகின்றனர். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று பிப்.,7ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் 15 முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22 முதல் 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 இயற்பியல் பாடப் பிரிவிற்கான செய்முறை தேர்வு 121 மையங்களில் நடந்தது. தேர்வில் 23,013 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை