மேலும் செய்திகள்
பிரதோஷ வழிபாடு
21-Aug-2025
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரிய நாயகி அம்மன், நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் சுவாமி கோவில், செம்மேடு காசிவிஸ்வநாதர் சுவாமி கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அருகம்புல், வில்வம், செவ்வரளி மாலைகளால் நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதே போன்று, தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர் கோவில்களிலும் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
21-Aug-2025