உள்ளூர் செய்திகள்

பிரதோஷ வழிபாடு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று சனி மகாபிரதோஷ பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு விநாயகர், நந்தி, சிவன், அம்மன், நந்தி பகவான் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார உலா வந்து அருள்பாலித்தார்.பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை