உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சந்திரமவுலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு

சந்திரமவுலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு

திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணிக்கு பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவியப்பொடி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ