மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
06-Oct-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு விநாயகர், நந்தி, சிவன், அம்மன், பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
06-Oct-2025