மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்
நடுவீரப்பட்டு: பண்ருட்டி சக்தி ஐ.டி.ஐ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஐ.டி.ஐ.,தாளாளர் அருள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். சிவராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சக்தி ஐ.டி.ஐ., இயக்குனர் ரஜினிகாந்த், நடராஜன், ரவிச்சந்திரன், சம்மந்தர், கார்த்திகேயன், ஐ.டி.ஐ., முதல்வர் செந்தில்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.