மாணவர்களுக்குசைக்கிள் வழங்கல்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்களுக்குவிலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சரவணகுமார் தலைமை தாங்கினார். தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், வர்த்தக சங்கதலைவர் ஆனந்தன், முன்னாள் துணைச் சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர்அன்வர் பாஷா வரவேற்றார்.பள்ளியில் பயிலும், 132 மாணவர்களுக்கு பரங்கிப்பேட்டைதுணைச் சேர்மன் முகமது யூனுஸ் வழங்கினார்.விழாவில், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசமூர்த்தி, அருள்முருகன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்சிலம்புச்செல்வி, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.