மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
30-Sep-2024
கடலுார்: கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, ஆயுத பூஜை விழாவையொட்டி தி.மு.க., சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கடலுார் செம்மண்டலம் குண்டுசாலை சமுதாய கூடத் தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மேயர் சுந்தரி ராஜா கலந்து கொண்டு, 150 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான பிரகாஷ் செய்திருந்தார். தி.மு.க., நிர்வாகிகள் ராமலிங்கம், விஜயகுமார், செல்வராஜ், சம்பந்தம், அண்ணாதுரை, மணி, பாஸ்கர், மணிகண்டன், முருகன், அஷ்ரப் அலி, விஷ்ணு, சதீஷ், விஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
30-Sep-2024