உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்பு கட்டை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தடுப்பு கட்டை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுச்சத்திரம் : ஆலப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலி அமைக்காததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடலுார் அடுத்த ஆலப்பாக்கம், சிதம்பரம் அடுத்த சிலம்பிமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையின் குறுக்கே, தடுப்பு கட்டைகள் அமைக்காமல் உள்ளது. இதனால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் நடக்கிறது. கடந்த மாதம் பரங்கிப்பேட்டை அடுத்த க ரிக்குப்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர், ஆலப்பாக்கம் மேம்பாலம் அருகே, சாலையை கடக்க முயன்றபோது, எதிரில் வந்த கார் மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுபோல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. எனவே ஆலப்பாக்கம், சிலம்பிமங்களத்தில் நான்கு வழிச்சாலையின் இடையே, தடுப்புக் கட்டை அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ