மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
கடலுார்: கடலுார் முதுநகர் மார்க்கெட்டில் மீன்வாங்க பொதுமக்கள் குவிந்தனர். வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. புயல் கரையை கடந்த பின் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ வஞ்சரம் மீன் 800 ரூபாய்க்கும், இறால் 300 ரூபாய்க்கும், சங்கரா கிலோ 400 ரூபாய்க்கும், கவலைமீன் 100 ரூபாய்க்கும் விற்பனையானது. இது சாதாரண நாட்களை விட கூடுதல் விலையாக இருப்பினும் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென் றனர்.