புதுச்சேரி போலீஸ்காரர் சிதம்பரத்தில் சாவு
சிதம்பரம்: புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் 6வது தெரு புது நகரை சேர்ந்தவர் செல்வராஜா, 44; புதுச்சேரி காவல்துறையின் உணவு பாதுகாப்பு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். தரிசனம் முடிந்து, கஞ்சி தொட்டி முனை அருகே உள்ள ஓட்டலில் குடும்பத்தினரை சாப்பிட சொல்லி விட்டு, காரில் அமர்ந்து மொபைல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், செல்வராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.ஷாலினி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.