| ADDED : ஆக 31, 2023 07:00 AM
மந்தாரக்குப்பம்,-மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி இல்ல புதுமனை புகுவிழா நடந்தது.மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, அரியலுார் மாவட்டம் பெரியதத்துாரில் புதியதாக கட்டுப்பட்டுள்ள தமயந்தி இல்ல புதுமனை புகுவிழா நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி திறந்து வைத்தார். மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, ஆண்டிமடம் ஒன்றிய துணை சேர்மன் தேன்மொழி வைத்தி குடும்பத்தினருக்கு பா.ம.க., நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில் மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் குமார், முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் சிவகண்டன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சண்முகவேல், செல்வகுமார், நெய்வேலி வடக்குத்து ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட வன்னியர் சங்க பொருளாளர் கார்த்திகேயன், முன்னாள் இளைஞரணி துணை செயலாளர் ராஜா, இளவரசம்பட்டு கிளை செயலாளர் ராஜா. கீழ்பாதி சக்திவேல், குரு, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் தமிழ்மணி, வழக்கறிஞர் செல்வமணி மற்றும்உறவினர்கள், விழாவிற்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.