மேலும் செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி
20-Sep-2025
புவனகிரி புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நவராத்திரி மகோற்சவத்தை முன்னிட்டு பிருந்தாவனத்தில் தினமும் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், சஹஸ்ரநாமம், அர்ச்சனை, விசேஷ தீபாராதனை, வேதபாராயணம், அகண்டதீப பூஜை மற்றும் இரவில் சிறப்பு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்து. விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையுடன் உற்சவம் நிறைவடைந்தது.
20-Sep-2025