ரயில்வே கேட் உடைந்து விழுந்தது கடலுார் அருகே பரபரப்பு
புதுச்சத்திரம்: கடலுார் அருகே ரயில்வே கேட் தானாக உடைந்து விழுந்ததால், இரண்டு ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே கேட் நேற்று காலை 8:45 மணியளவில் தானாக உடைந்து விழுந்தது. இதனால், திருச்சி - தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில், காரைக்கால் - பெங்களூர் செல்லும் ரயில்ள் செல்வதற்கு சிக்னல் கிடைக்காமல் புதுச்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் உடைந்த ரயில்வே கேட்டினை சேப்டி செயின் மூலம் சீரமைத்தனர். இதனால் இரண்டு ரயில்களும், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.