அக். 5, 6ம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருள்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு அக்., 5, 6 ஆகிய தேதிகளில் சென்று ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.