உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாகனம் மாயம் போலீசில் புகார்

வாகனம் மாயம் போலீசில் புகார்

கடலுார்: கடலுாரில் கடை முன்பு நிறுத்தியிருந்த வாகனம் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுார் அடுத்த கோண்டூரைச் சேர்ந்தவர் ரகுபதி,29; இவருக்குச்சொந்தமான சரக்கு வாகனத்தை கடந்த 21ம் தேதி இரவு, சாவடி ஜங்ஷன் பகுதியிலுள்ள மீன் கடை முன்பு நிறுத்திவிட்டுசென்றார். அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது சரக்கு வாகனத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !