உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

மந்தாரக்குப்பம்: ஊராட்சி பகுதிகளில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக் கை எடுக்க வேண்டும் . கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதன் பின் தினமும் குழாய்கள் மூலம் வீடு மற்றும் கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யப்படும் போது 'குளோரின்' கலந்து குடிநீர் வழங்கவும், குடிநீர் தொட்டியை துாய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறதா என சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து ஊராட்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். சுத்தம் செய்த நாள், சுத்தம் செய்ய வேண்டிய நாள் ஆகியவற்றை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் எழுத வேண்டும் என்பது விதி. தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீரால் பரவக்கூடிய காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை நீரத் தோக்க தொட்டியை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ