இலங்கை அகதிகள் கலெக்டரிடம் கோரிக்கை
கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே குடியிருக்கும் இடத்திலேயே வீடு கட்டி கொடுக்க வேண்டும் என, இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டையை சேர்ந்த இலங்கை அகதிகள் அளித்த மனு:எங்களுக்கு ரங்கநாதபுரத்தில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டாம். அங்கு செல்வதற்கு வசதிகள் இல்லை. எனவே, தற்போது குடியிருக்கும் அம்பலவாணன்பேட்டை இருப்பிடத்திலேயே வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.