உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 2 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்

ரூ. 2 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்

கடலுார் : வீடு புகுந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் சங்கர்,59; நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வேலைக்கு சென்றார். அவரது மனைவி காஞ்சனா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இரவு 8:30 மணிக்கு காஞ்சனா வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை சவரன் செயின், ஒரு சவரன் கம்மல், வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ