மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி வாலிபர் பலி
26-Aug-2025
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி,60; தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் அங்குசெட்டிப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் வந்துகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தட்சணாமூர்த்தியை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை 9:15 மணிக்குஅவர் இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Aug-2025