உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு

கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு

கடலுார்; கடலுார் கிருஷ்ணசாமி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 'இன்ஜினில் ஹைட்ரஜன் எரிபொருள்' ஆய்வு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.இயந்திரவியல் துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு மற்றும் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். அமெட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் விமலானந்த், சிறப்பு விருந்தினராக பங்கேற்று இன்ஜினில் ஹைட்ரஜன் எரிபொருள் ஆய்வு குறித்து பேசினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கோபால் செய்திருந்தார். புருஷோத்தமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !