உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சிறப்பு ேஹாமம்

கடலுார்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி முன்னிட்டு நாளை சிறப்பு ஹோமம் நடக்கிறது.விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு நாளை (11ம் தேதி) காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து தங்க கவசம், புஷ்ப அலங்காரம் செய்யப்படுகிறது. 9:00 மணிக்கு வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் யாக சாலையில் எழுந்தருளுகிறார். 10:00 மணிக்கு நரசிம்ம சுதர்சன தன்வந்திரி ஹோமம், 12:00 மணிக்கு வசுத்தரா ஹோமம், 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து கலச நீரைக்கொண்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி