மேலும் செய்திகள்
கெங்கைகொண்டான் பேரூராட்சி கூட்டம்
30-Aug-2025
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் ராயர், திருமாவளவன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். முகாமில் கெங்கைகொண்டான் பேரூராட்சி 1 முதல் 8 வார்டு வரை உள்ள பொதுமக்கள், கலைஞரின் உரிமை தொகை, இலவச மனை பட்டா, மின்சார இணைப்பு, மருத்துவ காப்பீட்டு அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. துணை தாசில்தார் சுமித்ரா, மண்டல துணை தாசில்தார் அன்புராஜ், வருவாய் ஆய்வாளர் ரகுராமன், இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., மணிகண்டன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
30-Aug-2025