உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் நகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியான விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகள் தொடர்பான மனுக்கள் பெற்றனர். நிகழ்ச்சியில், துணை சேர்மன் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், மேலாளர் சரவணன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.