உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு வயல் எரிந்து சேதம்

கரும்பு வயல் எரிந்து சேதம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 58; இவர் அதே பகுதியில் நான்கரை ஏக்கரில் கரும்பு பயிர் செய்திருந்தார். நேற்று மாலை 5:00 மணியளவில் கரும்பு வயல் வழியே சென்ற மின்கம்பி காற்றில் ஒன்றோடொன்று உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி