உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலில் குளித்தவர்களிடம் ரகளை; மூன்று வாலிபர்கள் கைது

கடலில் குளித்தவர்களிடம் ரகளை; மூன்று வாலிபர்கள் கைது

புதுச்சத்திரம்,: கடலுார் அருகே கடலில் குளிக்க வந்தவர்களிடம், மது போதையில் தகராறு செய்த வாலிபர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நேற்று முன்தினம் மாலை புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் நான்கு பேர் போதையில், கடலில் குளித்த பெண்கள் உள்ளிட்டோரிடம் தகராறு செய்து தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை அதிர்ச்சி அடைய செய்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தியாகவல்லி லெனின் நகரை சேர்ந்த மாணிக்கவேல், 24, தினேஷ்,21, சரவணன்,22, பிரவீன்,24, ஆகிய நான்கு பேர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர். தினேஷ், மாணிக்கவேல், சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
டிச 26, 2024 08:37

அங்கேயே லத்தியால் பின்பக்கம் தட்டி அனுப்பிற வேண்டியதுதானே. இவிங்களை கைது பண்ணா நாலு திருட்டு திராவிட பிரமுகர்கள் வந்து மிரட்டி விடுதலை செஞ்சு கூட்டிக்கிட்டு போயிடுவாங்களேடா.


சமீபத்திய செய்தி