உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 

செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் 

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே செம்மண் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை