உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தல் இருவர் கைது 

மணல் கடத்தல் இருவர் கைது 

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே வெள்ளாற்றில் சாக்குமூட்டைகளில் ஆற்றுமணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் டி.வி.புத்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வெள்ளாற்றில், சாக்குமூட்டைகளில் இருவர் ஆற்றுமணல் கடத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, மணல் கடத்தலில் ஈடுட்ட அதேபகுதியை சேர்ந்த தாமோதரன், 42; வேல்முருகன்,38; ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 7 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி