வெட்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
புவனகிரி, ;தலைக்குளம் வெட்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.மருதுார் அடுத்த வெட்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 6.00 மணிக்கு, பல்வேறு பூஜைகளுக்குப் பின் காலை 10.00 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விக்ரகத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவக்குமார் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.