| ADDED : ஜன 10, 2024 01:35 AM
வடலூர் : வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில் ஞானாலயா வள்ளலார் கோட்டம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், வள்ளலாரின் நாடு நம் வீடு கிராம மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடந்தது.சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஜோதிமணி தலைமை தாங்கினார். ஆபத்தாரணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் வரவேற்றார். முன்னாள் அரசு செயலர் சந்தானம் அறிமுக உரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடக்க உரையாற்றினார்.ஞானாலயா வள்ளலார் கோட்ட நிறுவனர் ஞானானந்த சுவாமிகள், திட்டம் குறித்து விளக்கி பேசினார். எஸ்.பி., ராஜாராம், என்.எல்.சி., பொது மேலாளர் செந்தில்குமார், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ், முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நாயனார், டி.ஆர்.எம் சாந்தி பர்னிச்சர் மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.மேட்டுக்குப்பம் கிராமத்தை நாடு நம் வீடு திட்டத்தின் கீழ் சுகாதாரம், பசுமை, அனைவருக்கும் கல்வி கிராம பொருளாதார தன்னிறைவு, அடிப்படை தன்னிறைவு, முதியோரை பேணுதல், தர்மசாலை அமைத்தல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.