உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி மாயம் கணவர் புகார் 

மனைவி மாயம் கணவர் புகார் 

பண்ருட்டி: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,28; பெயிண்டர். இவரது மனைவி ஜெயபாரதி,26; கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற ஜெயபாரதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ