மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
விருத்தாசலம்: பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். கோ.பவழங்குடி பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, 23 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்தது தெரிந்தது.உடன், போலீசார் வழக்குப் பதிந்து கடை உரிமையாளர் பாண்டியன் மனைவி அல்லிராணி,41; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.