உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருக்கண்டேஸ்வரத்தில் சந்தேகப்படும் படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த சுந்தர் மகன் ரஞ்சித்,21; என்பதும், தற்போது சென்னையில் வசிப்பதும் தெரிந்தது. சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திருக்கண்டேஸ்வரத்தில் விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்தை கைது செய்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை