உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு வெடித்ததில் வாலிபர் பரிதாப பலி

பட்டாசு வெடித்ததில் வாலிபர் பரிதாப பலி

கிள்ளை: கிள்ளையில், பட்டாசு வெடிக்கும்போது உடம்பில் பட்டு வாலிபர் இறந்தார். கிள்ளை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 24; இவர், கடந்த 20ம் தேதி தீபாவளி அன்று பட்டாசு வெடித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பட்டாசு சிதறல்கள் சந்தோஷ் உடம்பில் பட்டதால், படுகாயமடைந்து, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தா ர். விபத்து குறித்து சந்தோஷின் மனைவி அமுதா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை