மேலும் செய்திகள்
ஆசிரியர் பணி நிறைவு; பள்ளியில் பாராட்டு விழா
23-Jan-2025
மாணவியருக்கு பாலியல் தொந்தரவுகணித ஆசிரியர் போக்சோவில் கைதுதர்மபுரி:அரசு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கணித ஆசிரியரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தர்மபுரி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியிலுள்ள புகார் பெட்டியில், 10க்கும் மேற்பட்ட மாணவியர், ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுதி போட்டுள்ளனர். புகார் குறித்து, தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு மாணவிகளிடம் விசாரணை செய்தார். இதில், கணித ஆசிரியர் ராஜகுரு, 43, என்பவர் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில், தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு புகார் அளித்தார். அதன்படி போலீசார் நேற்று முன்தினம், கணித ஆசிரியர் ராஜகுருவை போக்சோவில் கைது செய்தனர்.
23-Jan-2025