மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
9 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
9 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
9 hour(s) ago
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 9:30 முதல், நேற்று காலை, 6:30 மணி வரை அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டப்பட்டியில், 90 மி.மீ., அரூர், 27.20 மி.மீ., தீர்த்தமலை, 34 மி.மீ., என மழை பெய்தது. தொடர்மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago