| ADDED : ஆக 21, 2024 02:03 AM
தொழிலாளி கொலை உறவினர் கைதுசேலம், சேலம், திருவாக்கவுண்டனுார், புத்தர் தெருவை சேர்ந்தவர் குமார், 50. இவருக்கு அதே பகுதியில் பூர்வீக நிலம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குமாரின் உறவினர் கோபால், 40. இவருக்கும், குமாருக்கும் இடையே நேற்று முன்தினம் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோபால், கட்டையால் குமார் தலையில் தாக்கியுள்ளார். அதில் காயம் அடைந்த குமாரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சூரமங்கலம் போலீசார், கோபாலை கைது செய்தனர்.இந்நிலையில் குமார் நேற்று உயிரிழந்தார். இதனால் அடிதடி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.