உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி

தர்மபுரி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அரசின், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 507 காலிப்பணியிடங் களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 2' மற்றும், 1,820 காலிப்பணியிடங்கள் கொண்ட, 'குரூப் - 2 ஏ' ஒருங்கிணைந்த முதல்நிலை தேர்விற்கான, இலவச பயிற்சி நடக்க உள்ளது. தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் நாளை, 28 முதல் ஜூலை, 5 வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் தொடர்ந்து இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், இந்த அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04342-296188 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை