மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
31-Aug-2024
அரூர்: அரூரில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ஜெகன்நாதன் முன்-னிலை வகித்தார். தாசில்தார்கள் அரூர் ராதாகிருஷ்ணன், பாப்பி-ரெட்டிப்பட்டி வள்ளி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அரசு அதிகா-ரிகள், விநாயகர் சிலை வழிபாட்டு குழுவினர் பங்கேற்றனர்.கூட்டத்தில், விநாயகர் சிலைகள் வைக்க முறையான அனுமதி பெற வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்-டிருக்க வேண்டும். ரசாயனம் கலந்த சிலைகளை வைக்கக் கூடாது. சிலைகள் வைக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடு, மின்-விளக்கு வசதியை சிலை வைப்பவர்கள் ஏற்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும், சிலைகளை வைக்க வேண்டும், 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகள் வைக்கக் கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே, விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும். சிலை ஊர்வலத்தின் போது பட்-டாசு வெடிக்கக் கூடாது, சமூகம் சார்ந்த கோஷங்கள் எழுப்பக்கூ-டாது, சிலைகள் வைத்த, 5 நாட்களில் கரைத்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
31-Aug-2024