மேலும் செய்திகள்
வாலிபர் சாவில் சந்தேகம் உறவினர்கள் சாலை மறியல்
04-Sep-2024
மகேந்திரமங்கலம்: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, வீரன்கொட்-டாயை சேர்ந்தவர் பிரபு, 25; இவர் கடந்த, 2 அன்று கண்-ணப்பன் என்பவரின் கரும்பு தோட்டத்தில், காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானார். அவரது சாவில் சந்-தேகம் இருப்பதாக கூறி, அவரின் உறவினர்கள், 100க்கும் மேற்-பட்டோர் நேற்று முன்தினம், ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன், மறியலில் ஈடுபட்-டனர். அங்கு வந்த டி.எஸ்.பி.,க்கள் மனோகரன், ராஜேஷ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய பின், மறியலை கைவிட்டனர். விசாரணை நடத்திய போலீசார், நில உரிமையாளரான கண்ணப்பன், 62, என்பவரை நேற்று கைது செய்தனர்.
04-Sep-2024