உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்புபாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடத்துார் பேரூராட்சியில், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இதை நேற்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., -கோவிந்தசாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதேபோன்று, கோபாலபுரம் ஊராட்சி கள்ளியூர் கிராமத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்- பாப்பிரெட்டிப்பட்டி -கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை