உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெவ்வேறு இடங்களில் 3 மாணவியர் மாயம்

வெவ்வேறு இடங்களில் 3 மாணவியர் மாயம்

தர்மபுரி: தர்மபுரியை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 16 அன்று பள்ளிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். அரூர் அடுத்த, மொரப்பூரை சேர்ந்த, 17 வயது மாணவி, சேலத்தி-லுள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 12 அன்று வீட்டிற்கு வந்தவர், 17 மாயமானார். பெற்றோர் புகார் படி, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். பாலக்கோட்டை சேர்ந்த, 14 வயது மாணவி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த, 15 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ