உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

அரூர், அரூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் தில்லை நகரை சேர்ந்த தேவராஜன் மனைவி தேவகி, 65. இவர், நேற்று காலை, 6:45 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அரூர் சிறு விளையாட்டு அரங்கிற்கு நடந்து சென்றார். அப்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், தேவகியின் கழுத்தில் இருந்த, ஐந்து பவுன் செயினை பறித்துக் கொண்டு மாயமாகினர். அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ