உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பெட்டிஷன் மேளாவில் 75 மனுக்களுக்கு தீர்வு

பெட்டிஷன் மேளாவில் 75 மனுக்களுக்கு தீர்வு

தர்மபுரி, தர்மபுரி, எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில், 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் தீர்வு காணப்படாத பல்வேறு வழக்குகளில் சுமூகமாக தீர்வு காணும் வகையிலும், புதிய புகார்களை விரைந்து முடிக்கும் வகையிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று, பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறும் வகையில், பெட்டிஷன் மேளா எனும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார்.காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடந்த முகாமில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களின் மனுக்களை, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ,.,க்கள் விசாரித்தனர். முகாமில், 75 மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. நேற்று புதிதாக வழங்கப்பட்ட, 29 மனுக்கள் விசாரிக்கப்பட்டு, விரைவில் தீர்வு காணப்படும் என, போலீசார்தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Periyasamy C
ஜூன் 15, 2025 01:10

சார் வணக்கம் என் பெயர் பெரியசாமி ஜமாபந்தியில கொடுக்கப்பட்ட மனு பாப்பிரெட்டிப்பட்டியில் கொடுக்கப்பட்ட மனு எந்தவிதமான விசாரணை இன்றி அது நிராகரிக்க பட்டது என்று சிறு எஸ்எம்எஸ் வந்து விட்டன இதற்கு என்ன காரணம் நமது ஜமாபந்திகள் மனு எதிர்க்க கொடுக்கப்படுகிறது அது ரெண்டு நாள் கழித்து பார்த்தீங்கன்னாக்க நிராகரிக்கப்பட்டது என்று மெசேஜ் வருது இது காரணம் என்ன பண பலமா ஆட்கள் பலமா இரண்டும் சேர்ந்து தான் இந்த மாதிரி செய்கிறார்கள் நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை