தெரு நாய்களால் தொல்லை கட்டுப்படுத்த வேண்டுகோள்
அரூர்,அரூரில், பஸ் ஸ்டாண்ட், திரு.வி.க., நகர், வர்ணதீர்த்தம், முருகர் கோவில் தெரு, பாட்சாபேட்டை, கோவிந்தசாமி நகர், நான்குரோடு போன்ற பகுதிகளில், கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், சாலையின் மையத்தில் படுத்து கொள்வதால், டூவீ லரில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக்கடை உள்ள பகுதியில் உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து பொதுமக்களுக்கு நாய்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதேபோல், அரூர், சிறு விளையாட்டு அரங்கில் கூட்டமாக சேரும் நாய்கள், திடீரென்று குறுக்கும், நெடுக்கும் ஓடுவதால், நடை பயிற்சி மேற்கொள்ள வருவோர், பீதியுடன் செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.