உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3.23 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3.23 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி : தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 3.23 லட்சம் ரூபாய்க்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின் விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்தினம், 17 பேரும் நேற்று, 9 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர்.இவர்கள், 21 குவியல்களாக, 721 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர். இது, 206 முதல், 545 ரூபாய் வரை சராசரியாக, 449 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 3.23 லட்சம் ரூபாய். நேற்று ஒரு நாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 4,852 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை