மேலும் செய்திகள்
பொருட்கள் குறித்த விழிப்புண
17-Nov-2024
பென்னாகரம்: பென்னாகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அனைத்து மகளிர் போலீசார் சார்பில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பென்னாகரம் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., தனம்மாள், அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டு, 'பெண் குழந்-தைகள் பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது, போக்சோ சட்டத்தின் விதிமுறை, இளம் வயதில் திருமணம் செய்-வதால் ஏற்படும் விளைவு, சமூக வலைதளங்களை மாணவ,- மாணவிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்ப-டுத்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, குற்ற செயல்களில் ஈடுபட துாண்டு-வது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவிகள், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
17-Nov-2024