அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் பந்தகாசி திருவிழா
அதியமான்கோட்டை:அதியமான்கோட்டையில் சுயம்பு காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேர்த்திருவிழா கூழ் ஊற்றி, அம்மன் சக்தி கரகம் வலம் வருதல், நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கும்ப பூஜை, கோ பூஜை மற்றும் வினாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்., 12-ல் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல், 14, 15ல் காளியம்மன் மஹாரத தேரோட்டம் நடந்தது. 16ல் பெரியதேர் நிலை அடைதல், நேற்று குதிரை வாகனத்தில், கீழ் காளியம்மன் மற்றும் மேல் காளியம்மன் பந்தகாசி ஊர்வலம் நடந்தது. இதில், பக்தர்கள் சுவாமி மீது கல்லை, மிளகு, தானியங்களை இறைத்து வேண்டுதல் செலுத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, மஞ்சள் நீராட்டு விழாவும், காளியம்மன் சிலை ஊர்வலத்துடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.