சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
அரூர்: அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட குடுமியாம்பட்-டியை சேர்ந்தவர் அருணாசலம், 53, இவர், சி.ஆர்.பி.எப்.,ல் எஸ்.ஐ.,யாக காஷ்மீர், அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில், 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். விருப்ப ஓய்வு பெற்ற அருணா-சலம், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நி-லையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலம் நேற்று இறந்தார். இதைய-டுத்து அவரது உடல், சென்னையிலிருந்து, மாலை, 6:00 மணிக்கு சொந்த ஊரான குடுமியாம்பட்டிக்கு எடுத்து வரப்பட்டது.தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்., படையினர் அருணாசலத்தின் உட-லுக்கு தேசியக்கொடியை போர்த்தி, மலர்வளையம் வைத்து அஞ்-சலி செலுத்தினர். பின், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்-லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இறந்த அருணாச-லத்தின் மனைவி ரோஜாவும் சி.ஆர்.பி.எப்.,ல் எஸ்.ஐ.,யாக பணி-புரிந்து வருகிறார். இவர்களுக்கு கவுசியா என்ற மகளும், தரணீஸ்-வரன் என்ற மகனும் உள்ளனர்.