உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

அரூர்: அரூரில், அரசு கல்லுாரி வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூரில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. அரூர்-தர்மபுரி சாலையில், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கல்லுாரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கல்லுாரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்தாண்டு அரூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை